திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருவீழிமிழலை தேவாரத் திருப்பதிகம்
(முதல் திருமுறை 20வது திருப்பதிகம்)
1.20 திருவீழிமிழலை - திருவிராகம்
பண் - நட்டபாடை
206
தடநில வியமலை நிறுவியொர் தழலுமிழ் தருபட அரவுகொ
டடல்அசு ரரொடம ரர்கள்அலை கடல்கடை வுழியெழு மிகுசின
விடமடை தருமிட றுடையவன் விடைமிசை வருமவ னுறைபதி
திடமலி தருமறை முறையுணர் மறையவர் நிறைதிரு மிழலையே.
207
தரையொடு திவிதல நலிதரு தகுதிற லுறுசல தரனது
வரையன தலைவிசை யொடுவரு திகிரியை அரிபெற அருளினன்
உரைமலி தருசுர நதிமதி பொதிசடை யவனுறை பதிமிகு
திரைமலி கடல்மண லணிதரு பெறுதிடர் வளர்திரு மிழலையே.
208
மலைமகள் தனையிகழ் வதுசெய்த மதியறு சிறுமன வனதுயர்
தலையினொ டழலுரு வனகரம் அறமுனி வுசெய்தவ னுறைபதி
கலைநில வியபுல வர்களிடர் களைதரு கொடைபயில் பவர்மிகு
சிலைமலி மதில்புடை தழுவிய திகழ்பொழில் வளர்திரு மிழலையே.
209
மருவலர் புரமெரி யினின்மடி தரவொரு கணைசெல நிறுவிய
பெருவலி யினன்நலம் மலிதரு கரனுர மிகுபிணம் அமர்வன
இருளிடை யடையுற வொடுநட விசையுறு பரனினி துறைபதி
தெருவினில் வருபெரு விழவொலி மலிதர வளர்திரு மிழலையே.
210
அணிபெறு வடமர நிழலினி லமர்வொடு மடியிணை யிருவர்கள்
பணிதர அறநெறி மறையொடு மருளிய பரனுறை விடமொளி
மணிபொரு வருமர கதநில மலிபுன லணைதரு வயலணி
திணிபொழில் தருமணம் மதுநுக ரறுபத முரல்திரு மிழலையே.
211
வசையறு வலிவன சரவுரு வதுகொடு நினைவரு தவமுயல்
விசையன திறன்மலை மகளறி வுறுதிற லமர்மிடல்கொடுசெய்து
அசைவில படையருள் புரிதரு மவனுறை பதியது மிகுதரு
திசையினின் மலர்குல வியசெறி பொழின்மலி தருதிரு மிழலையே.
212
நலமலி தருமறை மொழியொடு நதியுறு புனல்புகை ஒளிமுதல்
மலரவை கொடுவழி படுதிறன் மறையவ னுயிரது கொளவரு
சலமலி தருமற லிதனுயிர் கெடவுதை செய்தவர னுறைபதி
(*)திலகமி தெனவுல குகள்புகழ் தருபொழி லணிதிரு மிழலையே.
(*) திலதமிதென என்றும் பாடம்.
213
அரனுறை தருகயி லையைநிலை குலைவது செய்ததச முகனது
கரமிரு பதுநெரி தரவிரல் நிறுவிய கழலடி யுடையவன்
வரன்முறை யுலகவை தருமலர் வளர்மறை யவன்வழி வழுவிய
சிரமது கொடுபலி திரிதரு சிவனுறை பதிதிரு மிழலையே.
214
அயனொடும் எழிலமர் மலர்மகள் மகிழ்கண னளவிட லொழியவொர்
பயமுறு வகைதழல் நிகழ்வதொர் படியுரு வதுவர வரன்முறை
சயசய வெனமிகு துதிசெய வெளியுரு வியவவ னுறைபதி
செயநில வியமதில் மதியது தவழ்தர வுயர்திரு மிழலையே.
215
இகழுரு வொடுபறி தலைகொடு மிழிதொழில் மலிசமண் விரகினர்
திகழ்துவ ருடையுடல் பொதிபவர் கெடஅடி யவர்மிக அருளிய
புகழுடை யிறையுறை பதிபுன லணிகடல் புடைதழு வியபுவி
திகழ்சுரர் தருநிகர் கொடையினர் செறிவொடு திகழ்திரு மிழலையே.
216
சினமலி கரியுரி செய்தசிவ னுறைதரு திருமிழ லையைமிகு
தனமனர் சிரபுர நகரிறை தமிழ்விர கனதுரை யொருபதும்
மனமகிழ் வொடுபயில் பவரெழின் மலர்மகள் கலைமகள் சயமகள்
இனமலி புகழ்மக ளிசைதர இருநில னிடையினி தமர்வரே.
திருச்சிற்றம்பலம்
தடநில வியமலை நிறுவியொர் தழலுமிழ் தருபட அரவுகொ
டடல்அசு ரரொடம ரர்கள்அலை கடல்கடை வுழியெழு மிகுசின
விடமடை தருமிட றுடையவன் விடைமிசை வருமவ னுறைபதி
திடமலி தருமறை முறையுணர் மறையவர் நிறைதிரு மிழலையே.
207
தரையொடு திவிதல நலிதரு தகுதிற லுறுசல தரனது
வரையன தலைவிசை யொடுவரு திகிரியை அரிபெற அருளினன்
உரைமலி தருசுர நதிமதி பொதிசடை யவனுறை பதிமிகு
திரைமலி கடல்மண லணிதரு பெறுதிடர் வளர்திரு மிழலையே.
208
மலைமகள் தனையிகழ் வதுசெய்த மதியறு சிறுமன வனதுயர்
தலையினொ டழலுரு வனகரம் அறமுனி வுசெய்தவ னுறைபதி
கலைநில வியபுல வர்களிடர் களைதரு கொடைபயில் பவர்மிகு
சிலைமலி மதில்புடை தழுவிய திகழ்பொழில் வளர்திரு மிழலையே.
209
மருவலர் புரமெரி யினின்மடி தரவொரு கணைசெல நிறுவிய
பெருவலி யினன்நலம் மலிதரு கரனுர மிகுபிணம் அமர்வன
இருளிடை யடையுற வொடுநட விசையுறு பரனினி துறைபதி
தெருவினில் வருபெரு விழவொலி மலிதர வளர்திரு மிழலையே.
210
அணிபெறு வடமர நிழலினி லமர்வொடு மடியிணை யிருவர்கள்
பணிதர அறநெறி மறையொடு மருளிய பரனுறை விடமொளி
மணிபொரு வருமர கதநில மலிபுன லணைதரு வயலணி
திணிபொழில் தருமணம் மதுநுக ரறுபத முரல்திரு மிழலையே.
211
வசையறு வலிவன சரவுரு வதுகொடு நினைவரு தவமுயல்
விசையன திறன்மலை மகளறி வுறுதிற லமர்மிடல்கொடுசெய்து
அசைவில படையருள் புரிதரு மவனுறை பதியது மிகுதரு
திசையினின் மலர்குல வியசெறி பொழின்மலி தருதிரு மிழலையே.
212
நலமலி தருமறை மொழியொடு நதியுறு புனல்புகை ஒளிமுதல்
மலரவை கொடுவழி படுதிறன் மறையவ னுயிரது கொளவரு
சலமலி தருமற லிதனுயிர் கெடவுதை செய்தவர னுறைபதி
(*)திலகமி தெனவுல குகள்புகழ் தருபொழி லணிதிரு மிழலையே.
(*) திலதமிதென என்றும் பாடம்.
213
அரனுறை தருகயி லையைநிலை குலைவது செய்ததச முகனது
கரமிரு பதுநெரி தரவிரல் நிறுவிய கழலடி யுடையவன்
வரன்முறை யுலகவை தருமலர் வளர்மறை யவன்வழி வழுவிய
சிரமது கொடுபலி திரிதரு சிவனுறை பதிதிரு மிழலையே.
214
அயனொடும் எழிலமர் மலர்மகள் மகிழ்கண னளவிட லொழியவொர்
பயமுறு வகைதழல் நிகழ்வதொர் படியுரு வதுவர வரன்முறை
சயசய வெனமிகு துதிசெய வெளியுரு வியவவ னுறைபதி
செயநில வியமதில் மதியது தவழ்தர வுயர்திரு மிழலையே.
215
இகழுரு வொடுபறி தலைகொடு மிழிதொழில் மலிசமண் விரகினர்
திகழ்துவ ருடையுடல் பொதிபவர் கெடஅடி யவர்மிக அருளிய
புகழுடை யிறையுறை பதிபுன லணிகடல் புடைதழு வியபுவி
திகழ்சுரர் தருநிகர் கொடையினர் செறிவொடு திகழ்திரு மிழலையே.
216
சினமலி கரியுரி செய்தசிவ னுறைதரு திருமிழ லையைமிகு
தனமனர் சிரபுர நகரிறை தமிழ்விர கனதுரை யொருபதும்
மனமகிழ் வொடுபயில் பவரெழின் மலர்மகள் கலைமகள் சயமகள்
இனமலி புகழ்மக ளிசைதர இருநில னிடையினி தமர்வரே.
திருச்சிற்றம்பலம்