நற்றுணையாவது நமசிவாயவே!!!
முகப்பு (Home)
உள்ளே... (Contents)
திருவாசகம்!
1 சிவபுராணம் (1)
2. கீர்த்தித் திரு அகவல் (2)
3. திருவண்டப் பகுதி (3)
4. போற்றித் திருஅகவல் (4)
5. திருச்சதகம் (5 - 104)
6. நீத்தல் விண்ணப்பம் (105 - 154)
7. திருவெம்பாவை (155 - 174)
8. திரு அம்மானை (175 - 194)
9. திருப்பொற் சுண்ணம் - ஆனந்த மனோலயம் (195 - 214)
10. திருக்கோத்தும்பி - சிவனோடு ஐக்கியம் (215 - 234)
11. திருத்தெள்ளேணம் (235 - 254)
12. திருச்சாழல் - சிவனுடைய காருணியம் (255- 274)
13. திருப்பூவல்லி - மாயா விசயம் நீக்குதல் (275 - 294)
14. திருஉந்தியார் - ஞான வெற்றி (295 - 314)
15. திருத்தேள் நோக்கம் - பிரபஞ்ச சுத்தி (315 - 328)
16. திருப்பொன்னூசல் - அருட் சுத்தி (329- 337)
17.அன்னைப் பத்து - ஆத்தும பூரணம் (338 - 347)
18. குயிற்பத்து - ஆத்தும இரக்கம் (348 - 357)
19. திருத்தசாங்கம் - அடிமை கொண்ட முறைமை (358 - 367)
20. திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி (368 - 377)
21. கோயில் மூத்த திருப்பதிகம் - அநாதியாகிய சற
22. கோயில் திருப்பதிகம் - அனுபோக இலக்கணம் (388 - 397)
23. செத்திலாப் பத்து (398 - 407)
24. அடைக்கலப் பத்து - பக்குவ நிண்ணயம் (408 - 417)
25. ஆசைப்பத்து - ஆத்தும இலக்கணம் (418 - 427)
26. அதிசயப் பத்து - முத்தி இலக்கணம் (428 - 437)
27. புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம் (438 - 447)
28. வாழாப்பத்து - முத்தி உபாயம் (448 - 457)
29. அருட்பத்து - மகாமாயா சுத்தி (458 - 467)
30. திருக்கழுக்குன்றப் பதிகம் - குரு தரிசனம்
31. கண்டபத்து - நிருத்த தரிசனம் (475 - 484)
32. பிரார்த்தனைப் பத்து (485 - 495)
33. குழைத்தப் பத்து - ஆத்தும நிவேதனம் (496 -505)
34. உயிருண்ணிப்பத்து - சிவானந்தம் மேலாடுதல் (
35. அச்சப்பத்து - ஆனந்தமுறுத்தல் (516 - 525)
36. திருப்பாண்டிப் பதிகம் - சிவானந்த விளைவு (526 -5
37. பிடித்த பத்து - முத்திக்கலப்புரைத்தல் (536 - 545)
38. திருஏசறவு (546 - 555)
39. திருப்புலம்பல் - சிவானந்த முதிர்வு (556- 558)
40. குலாப் பத்து - அனுபவம் இடையீடுபடாமை (559 - 568)
41. அற்புதப்பத்து - அனுபவமாற்றாமை (569 -578)
42. சென்னிப்பத்து - சிவவிளைவு (579 - 588)
43. திருவார்த்தை - அறிவித் தன்புறுத்தல் (589 - 598)
44. எண்ணப்பதிகம் - ஒழியா இன்பத்துவகை (599 - 604)
45. யாத்திரைப் பத்து - அனுபவ அதீதம் உரைத்தல் (605-
46. திருப்படை எழுச்சி - பிரபஞ்சப் போர் (615 - 616)
47. திருவெண்பா - அணைந்தோர் தன்மை (617 - 627)
48. பண்டாய நான்மறை - அனுபவத்து ஐயமின்மை உரைத்
49. திருப்படை ஆட்சி - சீவஉபாதி ஒழிதல் (635 - 642)
50. ஆனந்தமாலை - சிவானுபவ விருப்பம் (643 - 649)
51. அச்சோப் பதிகம் - அனுபவவழி அறியாமை (650 - 661)
அறுபத்துமூவர்!
அறுபத்துமூவர்!
>
1. அதிபத்த நாயனார்!
2.அப்பூதி அடிகள்
3.அமர்நீதி நாயனார்
4.அரிவாட்டாய நாயனார்
5.ஆனாய நாயனார்
6.இசைஞானியார் நாயனார்
7.இடங்கழி நாயனார்
8.இயற்பகை நாயனார்
9.இளையான்குடி மாற நாயனார்
10.உருத்திர பசுபதி நாயனார்
11.எறிபத்த நாயனார்
12.ஏயர்கோன் கலிக்காம நாயனார்
13.ஏனாதிநாத நாயனார்
14.ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
15.கணநாத நாயனார்
16.கணம்புல்ல நாயனார்
17.கண்ணப்ப நாயனார்
18.கலிய நாயனார்
19.கழறிற்றறிவார் நாயனார்
20.கழற்சிங்க நாயனார்
21.காரி நாயனார்
22.காரைக்கால் அம்மையார்
23.குங்கிலியக்கலய நாயனார்
24.குலச்சிறை நாயனார்
25.கூற்றுவ நாயனார்
26.கலிக்கம்ப நாயனார்
27.கோச் செங்கட் சோழ நாயனார்
28. கோட்புலி நாயனார்
29. சடைய நாயனார்
30. சண்டேசுர நாயனார்
31. சத்தி நாயனார்
32. சாக்கிய நாயனார்
33. சிறப்புலி நாயனார்
34. சிறுத்தொண்ட நாயனார்
35. சுந்தரமூர்த்தி நாயனார்
36. செருத்துணை நாயனார்
37. சோமாசிமாற நாயனார்
38. தண்டியடிகள் நாயனார்
39. திருக்குறிப்புத்தொண்ட நாயனார்
40. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
41. திருநாவுக்கரசு நாயனார்
42. திருநாளைப்போவார் நாயனார்
43. திருநீலகண்ட நாயனார்
44. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
45. திருநீலநக்கர் நாயனார்
46. திருமூலதேவ நாயனார்
47. நமிநந்தி அடிகள் நாயனார்
48. நரசிங்க முனையரைய நாயனார்
49. நின்றசீர் நெடுமாற நாயனார்
50. நேச நாயனார்
51. புகழ்ச்சோழ நாயனார்
52. புகழ்த்துணை நாயனார்
53. பூசலார் நாயனார்
54. பெருமிழலைக்குறும்ப நாயனார்
55. மங்கையர்க்கரசியார் நாயனார்
56. மானக்கஞ்சாற நாயனார்
57. முருக நாயனார்
58. முனையடுவார் நாயனார்
59. மூர்க்க நாயனார்
60. மூர்த்தி நாயனார்
61. மெய்ப்பொருள் நாயனார்
62. வாயிலார் நாயனார்
63. விறன்மிண்ட நாயனார்
அறிவோம் (Blogs)
திருமுறைகள்!
பன்னிரு திருமுறைகள்!
>
முதல் திருமுறை
>
1.1 திருப்பிரமபுரம் (1-11)
1.2 திருப்புகலூர் (12-22)
1.3 திருவலிதாயம் (23-33)
1.4 திருப்புகலியும் - திருவீழிமிழலையும் (34-44)
1.5 கீழைத்திருக்காட்டுப்பள்ளி (45-54)
1.6 திருமருகலும்- திருச்செங்காட்டங்குடியு
1.7 திருநள்ளாறும் - திருஆலவாயும் (65-75)
1.8 திருஆவூர்ப்பசுபதீச்சரம் (76-86)
1.9 திருவேணுபுரம் (87-96)
1.10 திருஅண்ணாமலை (97-107)
1.11 திருவீழிமிழலை (108-118)
1.12 திருமுதுகுன்றம் (119-129)
1.13 திருவியலூர் (130 - 140)
1.14 திருக்கொடுங்குன்றம் (141-151)
1.15 திருநெய்த்தானம் (152-162)
1.16 திருப்புள்ளமங்கை - திருஆலந்துறை (163-173)
1.17 திருஇடும்பாவனம் (174-184)
1.18 திருநின்றியூர் (185-194)
1.19 திருக்கழுமலம் - திருவிராகம் (195-205)
1.20 திருவீழிமிழலை - திருவிராகம் (206-216)
1.21 திருச்சிவபுரம் - திருவிராகம் (217-227)
1.22 திருமறைக்காடு - திருவிராகம் (228-238)
1.23 திருக்கோலக்கா (239-249)
1.24 சீகாழி (250-260)
1.25 திருச்செம்பொன்பள்ளி (261-271)
1.26 திருப்புத்தூர் (272-282)
1.27 திருப்புன்கூர் (283-293)
1.28 திருச்சோற்றுத்துறை (294-304)
1.29 திருநறையூர்ச்சித்தீச்சரம் (305-315)
1.30 திருப்புகலி (316-326)
1.31 திருக்குரங்கணின்முட்டம்
1.32 திருவிடைமருதூர்
1.33 திரு அன்பிலாலந்துறை
1.34 சீகாழி
1.35 திருவீழிமிழலை
1.36 திரு ஐயாறு
1.37 திருப்பனையூர்
1.38 திருமயிலாடுதுறை
1.39 திருவேட்களம்
1.40 திருவாழ்கொளிபுத்தூர்
1.41 திருப்பாம்புரம்
1.42 திருப்பேணுபெருந்துறை
1.43 திருக்கற்குடி
1.44 திருப்பாச்சிலாச்சிராமம்
1.45 திருப்பழையனூர்-திரு ஆலங்காடு
1.46 திரு அதிகைவீரட்டானம்
1.47 திருச்சிரபுரம்
1.48 திருச்சேய்ஞலூர்
1.49 திருநள்ளாறு
1.50 திருவலிவலம்
1.51 திருச்சோபுரம்
1.52 திருநெடுங்களம்
1.53 திருமுதுகுன்றம்
1.54 திருஓத்தூர்
1.55 திருமாற்பேறு
1.56 திருப்பாற்றுறை
1.57 திருவேற்காடு
1.58 திருக்கரவீரம்
1.59 திருத்தூங்கானைமாடம்
1.60 திருத்தோணிபுரம்
1.61 திருச்செங்காட்டங்குடி
1.62 திருக்கோளிலி
1.63 திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து
1.64 திருப்பூவணம்
1.65 பல்லவனீச்சரம்
1.66 திருச்சண்பைநகர்
1.67 திருப்பழனம்
இரண்டாம் திருமுறை!
மூன்றாம் திருமுறை!
நான்காம் திருமுறை !
ஐந்தாம் திருமுறை!
ஆறாம் திருமுறை!
ஏழாம் திருமுறை!
எட்டாம் திருமுறை!
ஒன்பதாம் திருமுறை!
பத்தாம் திருமுறை!
பதினொன்றாம் திருமுறை!
>
1. திரு ஆலவாய் உடையார் பாசுரங்கள்
2.1 காரைக்கால் அம்மையார் பாசுரங்கள்
2.2 காரைக்கால் அம்மையார் பாசுரங்கள்
2.3 காரைக்கால் அம்மையார் பாசுரங்கள்
2.4 காரைக்கால் அம்மையார் பாசுரங்கள்
பன்னிரெண்டாம் திருமுறை!
>
திருமலைச் சருக்கம்!
>
1.00 பாயிரம்
1.01 திருமலைச் சிறப்பு
1.02 திருநாட்டுச் சிறப்பு
1.03 திருநகரச் சிறப்பு
1.04 திருக்கூட்டச் சிறப்பு
1.05 தடுத்தாட்கொண்ட புராணம்
ஞானத்தாழிசை!
பதிவிறக்கம்... (Downloads)
கருத்திட... (To Comment)
தேவாரம்!
தேவாரத் திருத்தலங்கள்!
தொகையடியார்கள்!
சிவமகா புராணம்!
சிவமகா புராணம் ஞான சம்ஹிதை (பகுதி-1) பக்கம்-1
>
சிவமகா புராணம் ஞான சம்ஹிதை (பகுதி-1) பக்கம்-2
சிவமகா புராணம் ஞான சம்ஹிதை (பகுதி-1)
சிவமகா புராணம் ஞான சம்ஹிதை (பகுதி-2)
சிவமகா புராணம் தர்ம ஸம்ஹிதை(பகுதி-1)
சிவமகா புராணம் தர்ம ஸம்ஹிதை(பகுதி-2)
சிவமகா புராணம் தர்ம ஸம்ஹிதை(பகுதி-3)
சிவமகா புராணம் கைலாய ஸம்ஹிதை
சிவமகா புராணம் ஸநத்குமார ஸம்ஹிதை (பகுதி-1)
சிவமகா புராணம் ஸநத்குமார ஸம்ஹிதை (பகுதி-2)
சிவமகா புராணம் வாயுஸம்ஹிதை-பூர்வ பாகம்(பĨ
சிவமகா புராணம் வாயுஸம்ஹிதை-பூர்வ பாகம்(பĨ
சிவமகா புராணம் வாயுஸம்ஹிதை உத்திர பாகம்(Ī
சிவமகா புராணம் வாயுஸம்ஹிதை உத்திர பாகம்(Ī
சிவமகா புராணம் - வித்தியேஸ்வர ஸம்ஹிதை
லிங்க புராணம்!
லிங்க புராணம் பகுதி-1
லிங்க புராணம் பகுதி-2
பிரதோஷ விரதம்!
MP3 பாடல்கள்...
திருவாசகம் விளக்கம்
அட்ட வீரட்டானம்
திருக்கண்டியூர்
வழுவூர்
சிவனின் அஷ்டாஷ்ட மூர்த்தங்கள்!
1. லிங்க மூர்த்தி
2. இலிங்கோற்பவ மூர்த்தி
3. முகலிங்க மூர்த்தி
4. சதாசிவ மூர்த்தி
5. மகா சதாசிவ மூர்த்தி
6. உமா மகேச மூர்த்தி
7. சுகாசன மூர்த்தி
8. உமேச மூர்த்தி
14. புஜங்கத்ராச மூர்த்தி
15. சந்த்யாந்ருத்த மூர்த்தி
16. சதா நிருத்த மூர்த்தி
17. சண்ட தாண்டவ மூர்த்தி
18. கங்காதர மூர்த்தி
19. கங்கா விசர்ஜன மூர்த்தி
20. திரிபுராந்தக மூர்த்தி
21. கல்யாண சுந்தர மூர்த்தி
22. அர்த்த நாரீஸ்வர மூர்த்தி
23. கஜயுக்த மூர்த்தி
24. ஜ்வராபக்ன மூர்த்தி
25. சார்த்தூலஹர மூர்த்தி
26. பாசுபத மூர்த்தி
27. கங்காள முர்த்தி
28. கேசவார்த்த மூர்த்தி
29. பிட்சாடன மூர்த்தி
30. சிம்ஹக்ன மூர்த்தி
31. சண்டேச அனுக்கிரக மூர்த்தி
32. தட்சிணாமூர்த்தி
33. யோக தட்சிணாமூர்த்தி
34. வீணா தட்சிணாமூர்த்தி
35. காலந்தக மூர்த்தி
36. காமதகன மூர்த்தி
37. இலகுளேஸ்வர மூர்த்தி
38. பைரவ மூர்த்தி
39. ஆபத்தோத்தாரண மூர்த்தி
40. வடுக மூர்த்தி
41. சேத்திரபால மூர்த்தி
42. வீரபத்திர மூர்த்தி
43. அகோர அத்திர மூர்த்தி
44. தட்சயக்ஞஷத முர்த்தி
45. கிராத மூர்த்தி (வேட மூர்த்தி)
46. குரு மூர்த்தி
47. அசுவாருட மூர்த்தி
48. கஜாந்திக மூர்த்தி
49. சலந்தரவத மூர்த்தி
50. ஏகபாதத்ரி மூர்த்தி
51. திரிபாதத்ரி மூர்த்தி
52. ஏகபாத மூர்த்தி
53. கௌரி வரப்ரத மூர்த்தி
54. சக்கர தான மூர்த்தி
55. கௌரிலீலா சமன்வித மூர்த்தி
56. விசாபகரண மூர்த்தி
57. கருடன் அருகிருந்த மூர்த்தி
58. பிரம்ம சிரச்சேத மூர்த்தி
59. கூர்ம சம்ஹார மூர்த்தி
60. மச்ச சம்ஹார மூர்த்தி
61. வராக சம்ஹார மூர்த்தி
62. பிரார்த்தனா மூர்த்தி
63. இரத்த பிட்சா பிரதான மூர்த்தி
அறிவோம் (Blogs)
4. போற்றித் திருஅகவல் (4)
(தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா)
திருச்சிற்றம்பலம்
நான்முகன் முதலா வானவர் தொழுது எழ
ஈர் அடியாலே மூவுலகு அளந்து
நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று
அடிமுடி அறியும் ஆதரவு அதனில்
கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து
ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து
ஊழி முதல்வ சயசய என்று
வழுத்தியும் காணா மலர்அடி இணைகள்
வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில் 10
யானை முதலா எறும்பு ஈறாய
ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும 20
ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரம் துயர் இடைப்பிழைத்தும்
ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகல் பசி நிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
கரும்குழல் செவ்வாய் வெள்நகைக் கார்மயில் 30
ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்துக்
கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து
எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து
ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
மத்தம் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்
கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்
நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 40
புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி
முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும்
ஆறு கோடி மாயா சக்திகள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்
சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்
பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்
விரதமே பரம் ஆக வேதியரும் 50
சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்
சமய வாதிகள் தம்தம் தங்களே
அமைவது ஆக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா வாதம் என்னும்
சண்ட மாருதம் சுழிந்து அடித்துத் தாஅர்த்து
உலோகாய தமெனும் ஒள் திறப்பாம்பின்
கலா பேதத்த கடுவிடம் எய்தி
அதில் பெருமாயை எனைப்பல சூழவும்
தப்பாமே தாம் பிடித்தது சலியாத்
தழலது கண்ட மெழுகு அது போலத் 60
தொழுது உளம் உருகி அழுது உடல்கம்பித்து
ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்
கொடிறும் பேதையும் கொண்டது விடாதென
படியே ஆகி நல் இடைஅறா அன்பின்
பசுமரத்து ஆணி அறைந்தால் போலக்
கசிவது பெருகிக் கடல் என மறுகி
அகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்துச்
சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப
நாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூண் அது ஆகக் கோணுதல் இன்றிச் 70
சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும்
கதியது பரமா அதிசயம் ஆகக்
கற்றா மனம் எனக் கதறியும் பதறியும்
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது
அருபரத்து ஒருவன் அவனியில் வந்து
குருபரன் ஆகி அருளிய பெருமையைச்
சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப்
பிறிவினை அறியா நிழல் அது போல
முன் பின்னாகி முனியாது அத்திசை
என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி 80
அன்பு எனும் ஆறு கரை அது புரள
நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி
உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்
கண்களி கூர நுண் துளி அரும்ப
சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர்
தாயே ஆகி வளர்த்தனை போற்றி
மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக்
கைதரவல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி 90
கூடல் இலங்கு குருமணி போற்றி
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி
மூவா நான்மறை முதல்வா போற்றி
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
மின் ஆர் உருவ விகிர்தா போற்றி
கல் நார் உரித்த கனியே போற்றி
காவாய் கனகக் குன்றே போற்றி
ஆ ஆ என்தனக்கு அருளாய் போற்றி
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்fறி 100
இடரைக் களையும் எந்தாய் போற்றி
ஈச போற்றி இறைவா போற்றி
தேசப் பளிங்கின் திரளே போற்றி
அரைசே போற்றி அமுதே போற்றி
விரை சேர் சரண விகிர்தா போற்றி
வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதி நேர் நெஞ்சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே போற்றி 110
கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
மூவேழ் சுற்றமும் முரண் உறு நரகு இடை
ஆழாமே அருள் அரசே போற்றி
தோழா போற்றி துணைவா போற்றி 120
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
முத்தா போற்றி முதல்வா போற்றி
அத்தா போற்றி அரனே போற்றி
உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி
விரிகடல் உலகின் விளைவே போற்றி
அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகி லாகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி 130
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி
மான்நேர் நோக்கி மணாளா போற்றி
வான்அகத்து அமரர் தாயே போற்றி
பார்இடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
அளிபவர் உள்ளதது அமுதே போற்றி
கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி
இடைமருது உறையும் எந்தாய் போற்றி
சடைஇடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீர் ஆர் திருவையாறா போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண் ஆர் அமுதக் கடலே போற்றி 150
ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
பராய்த் துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மற்று ஓர் பற்று இங்கு அறியோன் போற்றி
குற்றாலத்து எம் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலை எந்தாய் போற்றி
பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160
அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு
அத்திக்கு அருளிய அரசே போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஏனக் குருளைக்கு அருளினை போற்றி
மானக் கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள் கெட அருளும் இறைவா போற்றி
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170
களம் கொளக் கருத அருளாய் போற்றி
அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
அத்தா போற்றி ஐயா போற்றி
நித்தா போற்றி நிமலா போற்றி
பத்தா போற்றி பவனே போற்றி
பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய் போற்றி அமலா போற்றி
மறையோர் கோல நெறியே போற்றி
முறையோ தரியேன் முதல்வா போற்றி 180
உறவே போற்றி உயிரே போற்றி
சிறவே போற்றி சிவமே போற்றி
மஞ்சா போற்றி மணாளா போற்றி
பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி
இலங்கு சுடர் எம் ஈசா போற்றி
கவைத்தலை மேவிய கண்ணே போற்றி
குவைப்பதி மலிந்த கோவே போற்றி
மலை நாடு உடைய மன்னே போற்றி
கலை ஆர் அரிகேசரியாய் போற்றி 190
திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி
பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி
துரியமும் இறந்த சுடரே போற்றி
தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி
தோளா முத்தச் சுடரே போற்றி
ஆள் ஆனவர்களுக்கு அன்பா போற்றி
ஆரா அமுதே அருளா போற்றி
பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி 200
தாளி அறுகின் தாராய் போற்றி
நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி
மந்திர மாமலை மேயாய் போற்றி
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி
அலைகடல் மீ மிசை நடந்தாய் போற்றி
கரும் குருவிக்கு அன்று அருளினை போற்றி
இரும் புலன் புலர இசைந்தனை போற்றி 210
படி உறப் பயின்ற பாவக போற்றி
அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி
நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல்
பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி
செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி
கழு நீர் மாலைக் கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்
குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி 220
புரம்பல் எரித்த புராண போற்றி
பரம் பரம் சோதிப் பரனே போற்றி
போற்றி போற்றி புயங்கப் பெருமான்
போற்றி போற்றி புராண காரண
போற்றி போற்றி சய சய போற்றி 225
திருச்சிற்றம்பலம்
அடுத்து..
Google Analytics